சென்னை : 'மாற்று திறனாளிகளுக்கான பஸ் பாஸ் மார்ச் வரை செல்லும்' என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்:
அடையாள அட்டையை புதுப்பிக்க மாற்று திறனாளிகள் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாக ஏற்கனவே மாற்று திறனாளிகள் நல இயக்குனர் சுட்டிக் காட்டியிருந்தார். அதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் மார்ச் வரை செல்லும். இதுபற்றி அனைத்து கிளை மேலாளர்களும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE