சேலம்: சேலம் மாநகர் மாவட்ட, பா.ஜ., மகளிர் அணி சார்பில் நடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். சேலம், மூன்று ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், நேற்று காலை, பா.ஜ.,மகளிர் அணி சார்பில், பொங்கல் விழா நடந்தது. பரதம், சிலம்பம், கும்மிப்பாட்டு, ஜல்லிக்கட்டு, நடனம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, பா.ஜ., மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் சிவரஞ்சனா, பரிசு வழங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE