சேலம்: சேலம் மாவட்ட, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில், முப்பெரும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சங்க மாநில தலைவர் சண்முகநாதன் கூறியதாவது: தமிழகத்தில், 450 செயற்குழு; 1,500 பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு, 38 மாவட்டங்களில் சங்கம் செயல்படுகிறது. எங்கள் சமூகத்துக்கு, 63 ஆண்டுகளுக்கு பின், அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எங்களை மதிப்பவர்களுக்கு, ஆதரவு தருவோம். விஸ்வகர்ம, ஆன்மிக சமூகத்தை சேர்ந்தது. எனவே, ஆன்மிகத்துக்கு முதலிடம் தருவோம். சட்டசபை தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பதை, திருச்சியில் மார்ச் மாதம் நடக்கும் மாநில மாநாட்டில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE