கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த, 2019 பிப்ரவரியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்து பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, 25, சபரிராஜன், 25, சதீஷ், 28, வசந்தகுமார், 27, மணிவண்ணன், 28 ஆகிய ஐந்து பேரை சி.பி.ஐ., கைது செய்தது.இந்நிலையில் சி.பி.ஐ., விசாரணையில், பொள்ளாச்சி ஆச்சிபட்டி சங்கம்பாளையத்தை சேர்ந்த ஹெரன்பால், 29, வடுகபாளையத்தை சேர்ந்த பாபு, 27, அருளானந்தம், 34 ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தினால், பல்வேறு தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.இதையடுத்து, இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., சார்பில்இன்று (ஜன.,11) கோவை மகிளா கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, 3 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE