ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பிரபாகரன்,27; இவர்நேற்று மதியம் 1 மணியளவில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியிடம் தவறாக பேசி,கையை பிடித்து இழுக்க முயற்சி செய்துள்ளார். உடன் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரதுதந்தை வந்து பார்த்த போது, பிரபாகரன் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில்ரிஷிவந்தியம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE