கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே ஏரி கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
கச்சிராயபாளையம் அடுத்த திடீர்குப்பம் அருகே உள்ள கல்லேரி கால்வாயில் நேற்று காலை 8 மணியளவில் பிறந்து சில மணி நேரத்தில் தொப்புள் கொடி காயாத நிலையில் பெண் குழந்தை சடலம் ஒன்று நீரில் மிதந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.கச்சிராயபாளையம் போலீசார் பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE