செஞ்சி : பைக் மோதி நடந்து சென்ற முதியவர் இறந்தார்.
விழுப்புரம் அருகே உள்ள திருக்குணம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி 75; நேற்று காலை 6 மணிக்கு திருக்குணத்தில் இருந்து டி. கொசப்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மண்ணாங்கட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement