திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே பெண்ணை தாக்கிய அண்ணன், தம்பிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், 55; தனக்கு சொந்தமான மாடுகளை கடந்த 7ம் தேதி தனது உறவினர் நிலத்தில் கட்டி விட்டு அருகில் வேலை செய்துகொண்டிருந்தார். அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன்கள் கணேசன், 42; நடராஜன், 40; இருவரும் முனியம்மாளை, முன்விரோதம் காரணமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் அண்ணன், தம்பிகள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE