விழுப்புரம்: விழுப்புரம் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தில், தைப்பூச சிறப்பு பூஜை நடந்தது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் டிச., 11ம் தேதி முதல் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழு நாட்கள் விரதமிருந்து மேல்மருவத்துார் ஆதிபராக்தி கோவிலில், வழிபடுகின்றனர்.இந்நிலையில், விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில், பால், தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
இதை தொடர்ந்து, இரவு சிறப்பு பூஜை செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஜெயபாலன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அப்போது, சக்திபீட நிர்வாகிகள் சீத்தாராமன், சண்முகம், சுப்பிரமணி, அஷ்டலட்சுமி, மனோன்மணி, கணபதி, விஜி கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE