கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக க.மாமனந்தல் சாலை ஏ.கே.டி., நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் க.மாமனந்தல் சாலை ஏ.கே.டி., நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு இடையே மழை நீர் குளம்போல் சூழ்ந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் தண்ணீர் வடியாததால், குடியிருப்புவாசிகள், சுகாதாரம் கேள்விக்குறியாகி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் வெள்ளத்தை அகற்றிட அங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE