பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், அணையிலிருந்து வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. பருவமழையால் கடந்த நவ.,14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 105 கன அடி நீர்வரத்து வந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் நேற்று காலை, 6:00 மணிக்கு, அணைக்கு, 150 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து, 150 கன அடி நீரும் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஐந்து ஆயக்கட்டு ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போது, உபரிநீர் வாணியாறு மற்றும் கல்லாற்றில் செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE