கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில், சாலையோரம் குப்பைகள் கொட்டு வதை தடுக்க நுாதன முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் தென்கீரனுார் சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், குடியிருப்புகள் பலவும் உள்ளன. இச்சாலையில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையோரம் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதனால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் பொருட்டு குப்பைகள் கொட்ட கூடாது என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும், அங்கு மூன்று செங்கல் நட்டு வைத்து அதில் மஞ்சள் பூசி, சிகப்பு பொட்டு, பூ வைத்து சுவாமி வழிபடுபவது போல் நுாதன முறையை கடைபிடித்து குப்பைகள் கொட்டாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE