நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சி.என்.பாளையம், காமாட்சிபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன்,37; இவர் நேற்று முன்தினம் இரவு தமது வீட்டின் வெளியில் பைக்கை (டி.என்.31 சிபி 7861) நிறுத்தியிருந்தார். இரவு 10:00 மணிக்கு பார்த்தபோது பைக்கை காணவில்லை.இதுகுறித்து குணசேகரன் அளித்த தகவலின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நடுவீரப்பட்டு மெயின்ரோட்டில் ஒரே பைக்கில் வந்த நான்கு வாலிபர்களில் மூவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். பைக்குடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில், பண்ருட்டி அம்பேத்கர் நகர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்,19, என்பதும், குணசேகரனுடைய பைக் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஆகாைஷ கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபர்களை தேடி வருகின் றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE