ஓசூர்: சூளகிரி அருகே, விவசாயியை மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சூளகிரி அடுத்த அங்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 20, விவசாயி; இவருக்கும், கோத்தங்கிரியை சேர்ந்த முருகேஷ், 21, மாதேஷ், 26, பாஸ்கர், 24, மற்றும் புன்னாகரத்தை சேர்ந்த ரகு, 24, என்பவருக்கும் இடையே கடந்த, 8ல் மதியம் தகராறு ஏற்பட்டது. இதில் ஸ்ரீகாந்த்தை, மற்ற நான்கு பேரும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீசார், முருகேஷ், மாதேஷ், பாஸ்கர், ரகு ஆகிய நான்கு பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE