கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி, அம்மன் நகரை சேர்ந்தவர் ஜோதிபிரதாப், 23; இவர், அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதிக்கு வந்த ஒரு வாலிபர், கடையின் பூட்டை உடைத்து, இரண்டு மொபைல் போன்கள் உட்பட, 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அதைப்பார்த்த அங்கிருந்த மக்கள், அந்த வாலிபரை பிடித்து, கடை உரிமையாளரான ஜோதிபிரதாப் மூலம், குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து, போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மாதேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர், அதே பகுதியில் உள்ள சிக்காரிமேடு கிராமத்தை சேர்ந்த அக்பர்கான், 36, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE