ஓசூர்: ஓசூரில் நடந்த, 'நம்ம ஊரு பொங்கல் விழா'வில், சின்னத்திரை நடிகை, 121 மண்பானைகளில், பொங்கலிடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், 'நம்ம ஊரு பொங்கல் விழா,' ஓசூர் முனீஸ்வர் நகரிலுள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில், சின்னத்திரை நடிகையும், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினருமான ஜெயலட்சுமி, மாடுகளுக்கு மாலை அணிவித்து, கோ பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து, 121 பெண்கள் வைத்திருந்த மண்பானைகளில் அரிசியை போட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் சீனிவாசலு, செயலாளர்கள் முருகன், பாபு மற்றும் ஹரிகோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE