கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.இரண்டு பேரும் வெளி மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,836 ஆக உள்ளது. இதில், 10,702 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்தனர். 26 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE