கரூர்: கரூர், வெங்கமேட்டில், முதல்வர் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் சிறப்பு குறைதீர் நாள் முகாம்கள், மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக வெங்கமேடு சுற்றுவட்டாரத்தில் வார்டு எண், 12,13,14 ஆகிய பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டன. ஒரு மாத காலத்திற்குள் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்கனவே, மாவட்டத்தில், 43 ஆயிரம் பேர் பல்வேறு வகையான உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். தகுதியுடைய, 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE