காரைக்கால் : கடலில் விழுந்து தத்தளித்த மீனவரை, சக மீனவர்கள் நேற்று மீட்டனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு சொந்தமான பைபர் படகில், அப்பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு சென்றனர்.கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் கடல்சீற்றம் அதிகம் காணப்பட்டதால் காரைக்கால்மேட்டை சேர்ந்த அய்யப்பன்,30; என்பவர் கடலில் மீன்வலையை இழுத்தபோது, தடுமாறி கடலில் விழுந்தார். சகமீனவர்கள் கடலில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கோடியக்கரை அருகில் கடலில் தத்தளித்த அய்யப்பனை, அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE