புதுச்சேரி : உதயநிதியை கண்டித்து புதுச்சேரியில் இரு இடங்களில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான முதலியார்சாவடியில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரம் செய்தபோது, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை விமர்சித்து பேசினார்.அதனைக் கண்டித்து புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., சார்பில் ரயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், மாநில துணை செயலாளர் கணேசன், பன்னீர்செல்வி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேற்கு மாநில அ.தி.மு.க., சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில், கட்சியினர் லெனின் வீதி வழியாக ஊர்வலமாக சென்ணு சுப்பையா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் காசிநாதன், முன்னாள் எம்.பி., ராமதாஸ், மாநில நிர்வாகிகள் நாகமணி, பெரியசாமி, செல்வராஜ், விக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரை, உதயநிதி விமர்சனம் செய்தால், புதுச்சேரியில் நுழைய விட மாட்டோம் என ஒம்சக்திசேகர் எச்சரிக்கை விடுத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE