புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகை, சட்டசபை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் 3 ஷிப்ட்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கவர்னர் மாளிகை அருகில், தலைமை தபால் நிலைய சந்திப்பில் ராஜவேணி, 54; என்ற பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 2.00 மணி முதல் பணியில் ஈடுபட்டிருந்த அவர், மாலை 5.00 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். சக போலீசார் ராஜவேணியை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE