குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மக்கள் நீதி மையம் சார்பில், பூத் கமிட்டி அமைத்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார். குமாரபாளையம் தொகுதி முழுவதும், 279 பூத்கள் அமைக்கப்பட்டு, பூத் ஒன்றுக்கு, 10 பேர் வீதம் நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, தினமும், ஒரு வார்டு வீதம், 33 வார்டுகளில் கட்சியின் கொள்கைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வீடு வீடாக பிரசாரம் செய்தல், வாரம் ஒருமுறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்துதல், ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல், தொகுதி முழுதும் பொங்கல் விழா கொண்டாடுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE