நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க., சார்பில், 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில், நேற்று நடந்த கூட்டத்துக்கு தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர், 'கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சியாக இருந்தபோது தங்களுக்கு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கிடைத்து வந்தது; தற்போது நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் வேலை கிடைப்பது இல்லை' என்றனர். முன்னதாக, அங்குள்ள சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த துணி பந்தல், இருக்கை, பேனர்கள் அகற்றப்பட்டு, அருகே உள்ள ஏரிக்கரையில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE