நாமகிரிப்பேட்டை: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சி கல்குறிச்சி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நிழற்கூடம் உள்ளது. பேளுக்குறிச்சி செல்பவர்கள் அல்லது நாமகிரிப்பேட்டைக்கு வருபர்கள் பஸ்சுக்காக இங்குதான் காத்திருக்க வேண்டும். ஆனால், இதை பயன்படுத்த முடியாத நிலையில் அசுத்தமாக உள்ளது. தென்னை மட்டை கட்டுகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், உள்ளே அமர முடிவதில்லை. பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE