கோல்கட்டா: வேளாண் சட்டங்கள் தொடர்பாக பா.ஜ., தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், இந்தியா விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என மேற்குவங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசுக்கு, வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: நாடு ஒரு உணவு நெருக்கடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களில் மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களின் நலனுக்கு எதிரான எதையும் நாம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE