திட்டக்குடி : திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சுப்பிரமணியன். இருவரும் கூட்டாக, சென்னை, அம்பத்துாரில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளனர்.சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமார், 36, நேற்று காலை தனது மனைவி செல்வராணி, 27; மகன் ஸ்ரீசாய் ஆத்விக், 6; மற்றும் சுப்பிரமணியன், 46, அவரது தாய் முத்துலட்சுமி,70, ஆகியோருடன், 'மாருதி ஸ்விப்ட்' காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை, சுப்ரமணியன் ஓட்டினார்.
பிற்பகல் 3.௦௦ மணியளவில், கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கல்லுார் ஓடை பாலம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு, 15 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், காரின் கதவு திறந்ததால், சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த முத்துலட்சுமி உயிரிழந்தார்.பள்ளத்தில் விழுந்த கார் தீப்பற்றி எரிந்ததில், சுப்பிரமணியன் உடல் கருகி காருக்குள்ளேயே இறந்தார்.
வேப்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த முத்துக்குமார், செல்வராணி, ஸ்ரீசாய்ஆத்விக் ஆகிய மூவரையும் போலீசார் மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இறந்தார்.விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE