புதுடில்லி:''பாரம்பரிய பாதுகாப்பு குழு ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய பார்லிமென்ட் கட்டுமான பணி துவக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின், மத்திய விஸ்தா திட்டத்தின் கீழ், முக்கோண வடிவிலான புதிய பார்லிமென்ட் கட்டடம், தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்திற்கு அருகிலேயே கட்டமைக்கப்பட உள்ளது. 'புதிய பார்லிமென்ட் கட்ட, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதியை பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு குழுவில், 14 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு, புதிய பார்லிமென்ட் கட்ட, நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். குடியரசு தின விழா முடிந்த பின், பணிகள் துவக்கப்படலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE