சென்னை :'உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை, மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இன்றைய இடையீடு, மத்திய அரசு தன் கடமைகளை சரிவர ஆற்றவில்லை என்பதையே காட்டுகிறது.பல்வேறு தரப்புகளில் இருந்தும், கூறப்பட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு செவி சாய்த்தும், வேளாண சட்டங்ளைச் செயல்படுத்துவதை, மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE