கோவை:இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பொங்கல் விழா களை கட்டியது.தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா, வரும் வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு பள்ளி, கல்லுாரிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தது. மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையின் நுழைவாயிலில், குத்துவிளக்கேற்றி, கரும்பு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது.மருத்துவமனை டீன் நிர்மலா தலைமை வகித்து பொங்கலிட்டார். தொடர்ந்து பாரம்பரிய நடனத்துடன் கூடிய, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தமிழர் பண்பாட்டை குறிக்கும் வகையில், ஆடை அணிந்து டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE