சரவணம்பட்டி:கோவை சரவணம்பட்டி அண்ணாநகரை சர்ந்தவர் கணேசன்,39. இவர் தோட்டத்து சாலையில் குடியிருந்து வருகிறார். ஜனவரி 8 அன்று, வீட்டை பூட்டி விட்டு தாளவாடி சென்று விட்டார். நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் திருடு போயிருந்தது. புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement