கோவை:தமிழர்களின் பாரம்பரிய விழாவை போற்றும் விதமாக, கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி, 250 மி.கி., தங்கத்தில் பொங்கல் பானையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் ராஜா; தங்க நகை தொழிலாளி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 250 மி.கி., தங்கத்தை பயன்படுத்தி, இரண்டு காளை மாடு, இரண்டு தென்னை மரம், நெல் கதிர், சேவல், இருவர் சாமி கும்பிடுவது, தங்க பானையில் வெள்ளி பொங்கல் பொங்கி வருவது ஆகியவற்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
ராஜா கூறுகையில்,''தற்போது அனைத்து தொழில்களும், சீராக செயல்பட்டு வருகிறது. ஆனால், பொற்கொல்லர்கள் பழைய நிலையிலேயே உள்ளனர். நகை தயாரிக்க இயந்திரங்கள் வந்துள்ளதால், கைவினை கலைஞர்களின் நிலைமை மோசமாக உள்ளது. கைவினை தங்க நகை தொழிலாளர்களின் திறமையை தெரிந்து, அரசு உதவிட வேண்டும் என்ற நோக்கில், 250 மி.கி., தங்கத்தை பயன்படுத்தி தங்கப்பானையில் வெள்ளி பொங்கி வருவது போல், சிற்பம் வடிமைத்துள்ளேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE