ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழையில், மூன்று ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அப்போது, கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிய வாலிபர், இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்., நகரில் வசித்தவர் சண்முகராஜ், 24; மனைவி சங்கீதா, நான்கு மாத கர்ப்பிணி. ராமநாதபுரத்தில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கிய கன மழை, இரண்டு மணி நேரம் பெய்தது. அப்போது, சண்முகராஜ் உட்பட மூன்று பேரின் ஓட்டு வீடுகள், திடீரென இடிந்து விழுந்தன.பலத்த சத்தம் கேட்டு எழுந்த சண்முகராஜ், மனைவி சங்கீதாவை வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, அவரும் வெளியேறுவதற்குள், கட்டடத்தின் இடிபாடுகள் அவர் மீது விழுந்தன. இதில், சண்முகராஜ் பரிதாபமாக இறந்தார்.
மற்ற வீடுகளில் இருந்தவர்கள், சுதாரித்து வெளியேறியதால் தப்பினர். மூர்த்தி என்பவர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE