சான்டா குரூஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், படகு ஓட்டுவதற்கான பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம், துறைமுகத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு ஏற்பட்ட ராட்சத அலையால், அவர்களின் நான்கு படகுகளும் கவிழ்ந்தன. இதில், சிறுவர்கள், 12 பேர், நீரில் தத்தளித்தனர். தகவலறிந்து, கடலுக்குள் சென்ற மீட்புக் குழுவினர், நீரில் தத்தளித்த, 12 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement