நாகர்கோவில் : ''தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் இரண்டு நாட்களாக, பா.ஜ., சார்பில், நம்ம ஊர் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. ஜன., 14-ல் சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.மதுரை பொங்கல் விழாவில் சில விஷமிகள், பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். பா.ஜ., மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராக இருக்கிறது. அது நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும், பா.ஜ.,வை ஆதரிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE