திருப்பூர்:திருப்பூரில் நேற்று நடந்த சாலை விபத்தில், மகன் கண் முன், தாய் பரிதாபமாக பலியானார்.திருப்பூர், சூசையாபுரம், டி.எம்.எஸ்., காலனியை சேர்ந்தவர் தெய்வானை, 65. இவரது மகன் பழனிசாமி, 48. இருவரும் நேற்று காலை டூவீலரில் அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.பெரியார் காலனி அருகே வெள்ளகோவிலில் இருந்து ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி சென்ற டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது மோதி மற்றும் கடைக்குள் நுழைந்து சாய்ந்து நின்றது.இந்த கோர விபத்தில், மகன் கண்முன், தெய்வானை பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பழனிசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE