குமுளி : கேரளா குமுளியில் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த ராஜிவை 35, கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காஞ்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜிவ் 35. இவர் குமுளியில் தனியார் தங்கும் விடுதியில் வேலை பார்த்தார். அருகில் வசித்த 24 வயதுடைய பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். சொந்தத் தொழில் செய்வதாகக் கூறி ரூ. 27 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார். குமுளி எஸ்.ஐ., சஜிமோன் தலைமையிலான போலீசார் சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜிவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE