அனுப்பர்பாளையம்:திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, வாஷிங்டன் நகரை சேர்ந்தவர், செல்வம். இவரது மனைவி காமாட்சி.இவர்களுக்கு, சந்தோஷ், 15, தமன்னா, 10 என இரு குழந்தைகள். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவர்கள், குடும்பத்தினருடன், தொழில் நிமித்தமாக தஞ்சைக்கு சென்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், மீனாட்சி, பிரிந்து சென்றார்.மகன் மற்றும் மகள் இருவரும், தந்தை செல்வத்துடன் வசித்து வந்த நிலையில், 'திருப்பூரில் உள்ள தாயிடம் செல்லுங்கள்' எனக்கூறி, இருவரையும், பஸ்சில் அனுப்பி வைத்தார்.சந்தோஷ் மற்றும் தமன்னா, நேற்றுமுன்தினம் திருப்பூர் வந்தனர். வாஷிங்டன் நகருக்கு வந்தவர்கள், தாய் இருக்குமிடம் தெரியாமல் அலைந்தனர். இதையறிந்த, கருப்பையா என்பவர், தனது வீட்டில் தங்க வைத்தார். ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், பெருமாநல்லுார் போலீசாருக்கு தெரியப்படுத்தியதில், இருவரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE