கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை திட்டத்தின் கீழ்,'கிசான் மேளா' கூட்டம் நடந்தது.கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கி, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், பல்வேறு திட்டங்களை விளக்கினார்.மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் கஸ்துாரி திலகம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு, மண்வள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.இதில், தோட்டக்கலை உதவி அலுவலர் சந்திரன், அலுவலர் விஜயலட்சுமி, உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ரமேஷ், 'அட்மா' திட்ட அலுவலர்கள், விவசாயிகள் குழுஅங்கத்தினர்கள் உட்பட, விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE