கூடலுார் : முதுமலையில், சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு, 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, முதுமலை புலிகள் காப்பகம் மார்ச், 15ல் மூடப்பட்டது. ஒன்பது மாத இடைவெளிக்கு பின், 9ம் தேதி, திறக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, தெப்பக்காடு கார்குடி, அபயாரணயம் பகுதிகளில் உள்ள, வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும், நேற்று முதல் திறந்து செயல்பட துவங்கின.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான, வாகன சவாரி துவங்கப்பட்டுள்ளது. விடுதி அறைகளில், தலா இரண்டு பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE