கோவை : ''ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்க வேண்டாம். அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது:மக்கள் நீதி மையத்துக்கு, மனுநீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என, நான் கூறிய விஷயங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. நேர்மையாளர்களின் கூட்டுறவு இது. முதலில் ஓட்டு வங்கி; அதன் பின் நல்ல ஆட்சிக்கான அதிகாரம். அந்த அதிகாரம் இருந்தால் மட்டுமே நல்லது செய்ய முடியும். நல்லவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை அவருடையது. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.
அவர் எனக்கு நல்ல நண்பர். அவரது ஆரோக்கியம் தான் முக்கியம். அவர் கூறிய விஷயங்களை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, மனுநீதி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் அத்தப்ப மாணிக்கம், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் ஓட்டலில் கமல் ஹாசனை சந்தித்து, மக்கள் நீதி மையத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE