கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூர் பஸ்கள் உள்ளே வந்து செல்லாததால், மக்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே நின்று பஸ் ஏறி வருகின்றனர்.கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் பொள்ளாச்சி, கோவை மற்றும் கிராமங்களுக்குள் உள்ளூர் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. ஆனால், கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்வதில்லை.இதனால், மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்று கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறி செல்கின்றனர். புதிதாக வருபவர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் பல மணி நேரம் காத்திருந்த பின், பஸ்கள் வராததை உணர்ந்து, வெளியே வந்து பஸ் ஏறுகின்றனர். இதனால், பயணிகள் மிருந்த மன உைளச்சலுக்குள்ளாகி வருகின்றனர்.இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு கோவை மற்றும் பொள்ளாச்சி செல்ல முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை தவிர்க்க, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE