ஆனைமலை:ஆழியாறு சோதனைச்சாவடி அருகே வந்த, ஒற்றை ஆண் காட்டு யானையை வனத்துறையினர் வனத்தினுள் விரட்டினர்.ஆழியாறு, நவமலை வனப்பகுதிகளில், ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது, ஆழியாறு அணைக்கு நீர் குடிக்க வருவதுடன், பல நேரங்களில் சோதனைச்சாவடி, குரங்கு அருவி அருகில், ரோட்டை கடந்து செல்கின்றன.பருவமழை காரணமாக வனம் பசுமையாகி, கடந்த, ஆறு மாதமாக காட்டு யானைகள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஆழியாறு சோதனைச்சாவடி அருகிலுள்ள வனச் செயல்விளக்க மையத்தினுள், ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.யானையை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, வேட்டைத்தடுப்பு காவலர்கள், அரை மணி நேரம் போராடி யானையை வனத்தினுள் விரட்டினர். மேலும், ஆழியாறு, நவமலை பகுதிகளில், குடியிருப்புகளில் காட்டு யானை நுழைவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE