உடுமலை:கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், 23 ஆயிரத்து, 348 பேருக்கு, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.இதன் துவக்க விழா, உடுமலையில் நேற்று நடந்தது. அமைச்சர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜயகார்த்திகேயன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லீலாவதி, உதவி ஆணையர்கள் மலர்க்கொடி, ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE