கோவில்பாளையம்:அத்திப்பாளையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட வழிபாட்டுத்தலத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சியில், ராமசாமி லே--அவுட்டில் அனுமதியின்றி ஜெபக் கூடம் ஒன்று செயல்பட்டது. இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தினேஷ், மாவட்ட பொருளாளர் அசோக், ஒன்றியச் செயலாளர் தினேஷ் மற்றும் பொதுமக்கள் நேற்று அந்த வழிபாட்டு தலத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து கோவில்பாளையம் போலீசார் அங்கு சென்றனர். ஜெபக்கூட நிர்வாகிகளிடம், 'அனுமதி பெற்று செயல்பட வேண்டும். அனுமதி இல்லாமல் ஜெபக்கூடம் நடத்தக்கூடாது' என, அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE