சூலூர்:மகளிர் சுய உதவி குழுவினருக்கு, முதல்வரின் பொங்கல் வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கியும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விவரித்து முதல்வர் பழனிசாமி எழுதிய பொங்கல் வாழ்த்து மடல், சுய உதவி குழு நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சூலூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.யூனியன் சேர்மன் மாதப்பூர் பாலு, வாழ்த்து மடல்களை, சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார். மற்றும் பி.டி.ஓ., க்கள் ஷீலா, சுப்புலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம், 420 குழுக்களுக்கு வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE