அன்னூர்:தேசிய வருவாய்வழி தேர்வில் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாளாகும்.மத்திய அரசு சார்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொரு ஆண்டும், தேசிய வருவாய்வழி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில், ஆண்டு வருமானம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களின் குடும்பத்தினர், விண்ணப்பித்து, தேர்வு எழுதலாம்.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த நான்காண்டுகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி நாளாகும். கொரோனா காரணமாக பள்ளிகள் சரியாக செயல்படாத நிலையில், அன்னூர் ஒன்றியத்தில் இதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.'கடைசி நாளான, இன்றாவது, மாணவர்கள், பெற்றோர்களின் உதவியோடு, 50 ரூபாய் கட்டணத்துடன், ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி தேர்வை எழுதி உதவித்தொகை பெற முடியும்' என, கல்விக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE