சூலூர்:சூலூரில், விமானப்படை அதிகாரி வீட்டில், 49 சவரன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலூர் அடுத்த சகாய அன்னை நகரை சேர்ந்த அருள்மாணிக்கம் மகன் ஜோசப், 45. சூலூர் விமானப் படையில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வடவள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரு பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த, 49 சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது. திருடு போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய். சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE