ஊட்டி,:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குறுக்கு விசாரணை, வரும், 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.முக்கிய சாட்சிகளாக, கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த, பஞ்ச புஷ்பகர்ம, கிருஷ்ணதாபா, சுனில் தாபா ஆகியோர் குறுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதில், பஞ்ச புஷ்பகர்மா, சுனில் தாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.நேற்று, வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் உட்பட, மூவர் ஆஜராகினர். வழக்கை நீதிபதி சஞ்சய் பாபா, ஜன., 20க்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE