பெ.நா.பாளையம்:'காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. தனித்து இயங்குவோம்' என, அதன் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவையில் நடந்தது. இதில், மாநில அளவில், 37 மாவட்டங்களை சேர்ந்த, 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து இருக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநில பொது செயலாளர் குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இவ்வியக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் நீடிக்கிறார். இயக்க செயல்பாடுகளை விரைவுபடுத்த, மாநில செயல் தலைவராக டென்னிஸ் கோவில்பிள்ளை, மாநில துணைத் தலைவராக கந்தசாமி, மாநில பொது செயலாளராக குமரய்யா, மாநில பொருளாளராக நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது; தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன், காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு சகோதர பாசத்துடன் நீடிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE