பாகூர்; முன்விரோதத்தில் வாலிபர் வீட்டிற்கு சென்று மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.தவளக்குப்பம் அடுத்துள்ள நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி, 37; இவரது அக்கா மகன் அஜித் 24; ஆட்டோ டிரைவர். இவருக்கும் , அதே பகுதி குமரகுரு என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 9ம் தேதி இரவு குமரகுரு, அவரது நண்பர்கள் ஜெயக்குமார், ஆதிகேசவன், பெருமாள் ஆகியோர் அஜித் வீட்டிற்கு சென்று அவரது சித்தி கலைச்செல்வியிடம், ஆட்டோ கண்ணாடியை உடைத்ததற்கு போலீசில் எப்படி புகார் அளிக்கலாம் என கேட்டு, மிரட்டினர். கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE